×

சேலம் கோயிலில் நகை திருடிய 2 பேர் கைது

சேலம், ஜன.5: சேலம் கருப்பூர் செங்கரடு அருகே பெருமாள் மலையில் சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. கடந்த 31ம் தேதி கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சாமி சிலையில் இருந்த தாலி குண்டு மணி, வெள்ளி பொருட்கள், நகை, பித்தளை பொருட்கள், ₹10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அங்கிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் உடைத்தனர். இதுபற்றி கோயில் தர்மகர்த்தா மாரிமுத்து என்பவர் கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மர்மநபர்கள் கேமராவை உடைப்பதற்கு முன்பு பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், வாழப்பாடி பக்கமுள்ள அத்தனூர்பட்டியை சேர்ந்த வெங்கடேசன்(36), கோர்ட் ரோடு கண்ணன் (35) ஆகிய 2பேர் கோயிலில் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ₹88ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சேலம் கோயிலில் நகை திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem temple ,Salem ,Srinivasaperumal ,Perumal Hill ,Salem Karuppur Senkaradu ,Sami ,Thali ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...